அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி ஆண்டு முடியும் தறுவாயில் கூட, புத்தகப் பை உட்பட, இலவச பொருட்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.அரசு பள்ளி மாணவர்களிடம் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பஸ் பாஸ், சீருடை, நோட்டுப் புத்தகம், காலணி உட்பட, 16 இலவச பொருட்கள் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. ஆனால், 13 பொருட்களை மட்டுமே வழங்கி உள்ளனர்.கல்வி ஆண்டு முடிய உள்ள நிலையில், ஆறு முதல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச வடிவியல் பெட்டி - ஜியோமெட்ரி பாக்ஸ், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு காலணி, ஒன்று முதல், பிளஸ் 2 மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கப்படவில்லை.கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கல்வி ஆண்டு முடிவதற்குள், எஞ்சிய இலவச பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு உத்தரவுக்குபின், விடுமுறை நாட்களில் கூட, மாணவர்களை அழைத்து கொடுத்து விடுவோம்" என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி