டெல்லியில் உள்ள மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2013ம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த உள்ளது. மத்திய அரசு பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவ மாணவியருக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இந்தத் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இதற்காக விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 16ம் தேதி கடைசி நாள் ஆகும். எழுத்துத் தேர்வு ஜூலை மாதம் 28ம் தேதி நடக்கிறது. அன்று காலை 10.30 மணி முதல் 12மணி வரை முதல்தாள் தேர்வு ஒன்றரை மணி நேரம் நடைபெறும். 2ம் தாள் தேர்வு அன்று பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை ஒன்றரை மணி நேரம் நடைபெறுகிறது.மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில்தேர்ச்சி பெறுபவர்கள் மத்திய அரசு பள்ளிகளான கேவிஎஸ், என்விஎஸ், டைபீட்டன் பள்ளிக ளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மாநில அரசுகளும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்கலாம் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை ‘தி அசிஸ்டென்ட் செக்ரட்டரி (சிடிஇடி), சென்ட்ரல் போர்டு ஆப் செக்கண்டரி எஜூகேஷன், பிஎஸ்1&2, இன்டிட்டியூஸ்ஷனல் ஏரியா 1 பி எக்ஸ்டென்சன், பட்பர்கஞ்ச், டெல்லி 110092 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி