பள்ளிகளில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் - 360 கோடி ஒதுக்கீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2013

பள்ளிகளில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் - 360 கோடி ஒதுக்கீடு.

தமிழகத்தில், 14,130 பள்ளிகளில், வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு, 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசின் செய்திக்குறிப்பு: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, மதிய உணவு வழங்கப்படுகிறது. அரிசி, பருப்பு, முட்டை, பழங்கள் போன்ற உணவுப் பொருட்கள் கெடாமல் பாதுகாக்க, முதல்கட்டமாக, 21,990 பள்ளிகளில், வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.இதை தொடர்ந்து, மேலும், 14,130 பள்ளிகளில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டும் பணிக்காக, 360 கோடி ரூபாய்க்கு, நிர்வாக ஒப்புதல் வழங்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி