பார்லி., முன் ஏப்., 4ல் ஆசிரியர் கூட்டணி மறியல்: பொது செயலர் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2013

பார்லி., முன் ஏப்., 4ல் ஆசிரியர் கூட்டணி மறியல்: பொது செயலர் தகவல்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 4ல், பார்லிமென்ட் முன் மறியல் போராட்டம்நடத்த உள்ளோம் என அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொது செயலர்,ஈஸ்வரன் கூறினார்.ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: கல்வி உரிமை சட்டத்தை, ஏற்கனவே முடிவு செய்தது போல், 2015க்குள் நிறைவேற்ற வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் என்பதை தவிர்த்து, தலைமை ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். பள்ளி கல்வித் துறையில், தனியார் பங்களிப்பு திட்டத்தையும், ஆசிரியர் தகுதி தேர்வையும் தவிர்க்க வேண்டும். ஆறாவது ஊதியக்குழு நிர்ணயித்த சம்பளத்தை, தற்போதைய அடிப்படையில் அமல்படுத்த வேண்டும். பழைய முறையில் பென்ஷன் திட்டத்தை அறிவிக்க வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 4ல் பார்லிமென்ட் முன், தமிழகம் உட்பட, 19 மாநிலங்களிலிருந்து,60 ஆயிரம் ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு ஈஸ்வரன் கூறனார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி