வேலை வாய்ப்பு அலுவலகம் : பதிவு நேரம் குறைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2013

வேலை வாய்ப்பு அலுவலகம் : பதிவு நேரம் குறைப்பு.

வேலை வாய்ப்பு அலுவலகங்களில், நிர்வாக காரணங்களுக்காக சான்றிதழ்கள் பதிவு செய்யும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக உள்ளதால், பதிவு, புதிப்பித்தல், முகவரி மாற்றம் மற்றும்விசாரணை குறித்த அனைத்து அலுவல்களும், பகல் 3 மணிக்குள் முடிக்கப்படும். அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், இந்த நேரத்தை கடை பிடிக்குமாறு, சென்னை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. எனவே பதிவு செய்ய வருவோர், பகல் 3 மணிக்கு முன்னரே வந்து விட வேண்டும்,என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில் பணிச்சுமை, நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி