செயல்வழி கற்றல்: தமிழகத்தில் ம.பி குழு அதிகாரிகள் ஆய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2013

செயல்வழி கற்றல்: தமிழகத்தில் ம.பி குழு அதிகாரிகள் ஆய்வு.

தமிழகத்தின் செயல் வழி கற்றல் முறையை, மத்திய பிரதேசத்தில் அமல்படுத்த, அம்மாநில அதிகாரிகள் குழு, இரண்டாம் கட்டமாக ஆய்வு செய்து உள்ளனர்.மத்திய பிரதேசத்தில் கல்வித்துறையை மேம்படுத்த, செயல் வழி கற்றல்முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளனர். ஒன்றாம் வகுப்புமுதல் நான்காம் வகுப்பு வரை உள்ள செயல்வழி கற்றல் முறை குறித்து, ம.பி., அதிகாரிகள் குழு, முதல்கட்டமாக, ராமேஸ்வரம் பள்ளிகளில் ஆய்வு செய்து சென்றனர். இரண்டாம் கட்டமாக, அம்மாநில பயிற்சித் துறை இயக்குனர் வினல் தலைமையில், அதிகாரிகள் விஷ்ணுபிரகாஷ், வினய் குல்கர்னி உள்ளிட்ட ஐந்து பேர், சென்னையில் உயர் அதிகாரிகளை சந்தித்து, திட்டங்கள் குறித்து கேட்டு அறிந்தனர்.பின், ராமேஸ்வரம், தனுஷ்கோடி பள்ளிகளில் ஆய்வு செய்தனர்."மாணவர்கள், செயல் வழி கற்றல் மூலம் எந்த அளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர்" என, கேள்விகள் கேட்டனர்.குழுவினர் கூறுகையில், "வாசிப்பு திறன், கணிதப் பாடங்களில், தமிழக மாணவர்கள் திறம்பட உள்ளனர். இத்திட்டத்தை விரைவில் மத்திய பிரதேசத்தில் துவங்க உள்ளோம்" என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி