ஆசிரியைகள் வாரத்திற்கு 3 நாட்கள் சீருடைஅணிந்து, கொண்டையிட்டு, குறைந்த "மேக்கப்" மற்றும் நகைகள் அணிந்து வரவேண்டும். ஆசிரியர்கள் முழு நீள சட்டை அணிந்து, "ஷூ" அணிந்து வரவேண்டும் என்று, கட்டுப்பாடு விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இம்முடிவு, கல்விக் குழுத் தலைவர் சுகந்தி, கல்வி அலுவலர் மதியழகு ராஜா தலைமையில் நடந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில்எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.இந்நிலையில், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் செந்தூர்பாண்டியன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆசிரியைகள் சீருடை அணிந்து வரவேண்டும் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் ஆசிரியர்களுக்கு எதிரானது. இந்த முடிவை கைவிட வேண்டும். அலுவல் சார்ந்த பல விஷயங்கள் மற்றும்தலைமை ஆசிரியர்கள் செயல்பாட்டிலும் கல்வி குழுத் தலைவரின் கணவர் அசோக் தலையிடுகிறார். அவர் மீது கமிஷனர் நந்தகோபால் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி