பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாக்குறுதி அளித்தபடி கல்வித்துறை வசதிகள் செய்து தராததால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் இதற்கான மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கண்காணிப்பில் பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்மயா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஜான்ஸ் பள்ளி மையத்தில் டம்மி விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. இங்கு சுமார் 500 ஆசிரியர்கள் காலை 8,30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர். இங்குகல்வித்துறை ஏற்கனவே அறிவித்தபடி தங்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து நெல்லை மாவட்ட மேல்நிலைப்பள்ளிமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் சண்முகபாண்டியன், செயலாளர் பாபுசெல்வன், பிரசார செயலாளர் தனசிங் ஐசக் மோசஸ் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகள்செய்து தரவேண்டும் என ஏற்கனவே மனு அளித்து இருந்தோம். ஆனால்,பாளை. ஜான்ஸ் பள்ளி மையத்தில் காற்றோட்ட வசதி இல்லை, மின் விசிறி பொருத்தப்படவில்லை. கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் வியர்வை குளியலில் நனைந்து மனஉளைச்சல் அடைகின்றனர். இதனால் திருத்தும் பணியில் சிரமம் ஏற்படுகிறது.மேலும் இந்த ஆண்டு ‘திருத்தம் இல்லா திருத்தம்‘ என கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரவேற்க தக்கது என்றாலும் 2 அல்லது 3 மதிப்பெண் வித்தியாசம் இருந்தாலும் அன்றைய தினம் மாலையே புறப்பட்டு சென்னைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்ற உத்தரவு பலரையும் பாதித்துள்ளது. முதலில் அமைதியான மனநிலையில் விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையேல் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க நேரிடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி