பதவி உயர்வுக்கு தடையாக உள்ள அரசாணைக்கு முதுகலை ஆசிரிய, ஆசிரியைகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.பாளை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன்பு நேற்று முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் வாயிற் கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் அய்யாத்துரை தலைமை வகித்தார். பொருளாளர் தளவாய்,அமைப்பு செயலாளர் ஹரிராமா, கல்வி மாவட்ட செயலாளர் அகமது உசேன் முன்னிலை வகித்தார். சேரன்மகாதேவி கல்வி மாவட்ட செயலாளர் ஜான் ததேயூஸ் வரவேற்றார். மாநில தலைவர் சுப்பையா, மாநில துணை தலைவர்
சீனி, மாவட்ட செயலாளர் மனோகரன் உட்பட பலர் பேசினர்.பிளஸ் 2 விடைத்தாளுக்கு 10 ரூபாய் மதிப்பூதியம் வழங்க வேண்டும். முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள அரசாணை 720ல் திருத்தம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிக்கப்படும் வகையில் விதிமுறைகளை முரணாக செயல்படும் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மீது கல்வித் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமான முதுகலை ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.தென்காசி கல்வி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.
சீனி, மாவட்ட செயலாளர் மனோகரன் உட்பட பலர் பேசினர்.பிளஸ் 2 விடைத்தாளுக்கு 10 ரூபாய் மதிப்பூதியம் வழங்க வேண்டும். முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள அரசாணை 720ல் திருத்தம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிக்கப்படும் வகையில் விதிமுறைகளை முரணாக செயல்படும் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மீது கல்வித் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமான முதுகலை ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.தென்காசி கல்வி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி