ஊரக திறனாய்வு தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2013

ஊரக திறனாய்வு தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு.

தமிழகத்தில் கிராம மாணவர்களுக்கு, நடத்தப்பட்ட ஊரக திறனாய்வுதேர்வு முடிவுகளை, இணையதளத்தில் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. கிராமப்புறங்களில் எட்டாம் வகுப்பு தேர்வில், 50 சதவீத மதிப்பெண் பெற்ற, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு, 2012 நவ., 18 ல் நடத்தப்பட்டது. தேர்வுத்துறையில் பழைய பேப்பர் விற்பனையின் போது, ஒரு சில மாணவர்களின் விடைத்தாள்களும் விற்பனை செய்யப்பட்டன. விடைத்தாள்கள் இல்லாத மாணவர்களுக்கு
, மறு தேர்வு நடத்தப்பட்டது. தற்போது, இதற்கான தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில், முதல் மதிப்பெண் பெற்ற 50 மாணவர்கள், 50 மாணவிகளுக்கு 12 ம் வகுப்பு படிக்கும் வரை, ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக, அரசு வழங்குகிறது. தேர்வு முடிவுகளை http://www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி