மூவர் குழு அறிக்கையை வெளியிட மே 4 ல் அடுத்த கட்ட போராட்டம்: அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2013

மூவர் குழு அறிக்கையை வெளியிட மே 4 ல் அடுத்த கட்ட போராட்டம்: அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு.

ஊதிய முரண்பாடு தொடர்பான, மூவர் குழு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தும், அதை வெளியிட தாமதம் செய்வதை கண்டித்து,மே 4ல் அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரப்படுத்த, அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. சட்டசபை தேர்தலின் போது, அரசு ஊழியர்களின் முரண்பாடுகள் களையப்படும் என, முதல்வர் ஜெ., வாக்குறுதி வழங்கினார். அதன்படி, சம்பள முரண்பாடு களைய, கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது.குழுவானது, அரசு ஊழியர்கள் சங்கங்கள், அமைப்புகளிடம் கருத்துக்கள் கேட்டு, அதன் அறிக்கையை 2012 டிச., 31 ல் அரசுக்கு வழங்கியது. இதை எதிர்பார்த்து, எட்டு லட்சம் அரசு ஊழியர்கள், 4 லட்சம் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அரசு, அறிக்கையை வெளியிடாமல் தாமதம் செய்கிறது. இதை கண்டித்து, தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று, அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, ஏப்., 17 ல் மாலை நேர தர்ணா போராட்டம் நடக்க உள்ளது. அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ,""சம்பள முரண்பாடு குறித்த, குழு அறிக்கையை, வெளியிடாமல் அரசு தாமதம் செய்கிறது. இதை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டும், அரசு மெத்தனமாக உள்ளது. திருவாரூரில் மே 4 ல் நடக்க உள்ள மாநில பேரவையில், அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரப்படுத்த, முடிவு எடுக்கப்படும்,''என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி