தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அரசு மற்றும் நகராட்சி உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி.பள்ளியில் நடைபெற்ற கலந்தாய்வில் 2 பேர் பணியிட மாறுதல் ஆணைகளை பெற்றனர். இந்த கலந்தாய்வு மிகவும் வெளிப்படையாகவும்,நேர்மையாகவும் நடைபெறுவதாக இதில் பங்கேற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இதேபோல், திருவள்ளூர், நெல்லை, நாகை உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
May 23, 2013
Home
TRF
தமிழகம் முழுவதும் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, வெளிப்படையாய் நடைபெறுவதாக பங்கேற்றோர் மகிழ்ச்சி.
தமிழகம் முழுவதும் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, வெளிப்படையாய் நடைபெறுவதாக பங்கேற்றோர் மகிழ்ச்சி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி