பிளஸ்–2 மறுமதிப்பீட்டுக்கு ஆன்–லைனில் விண்ணப்பம் அனுப்பி விட்டு கட்டணம் செலுத்தாதத மாணவிக்கு மறு மதிப்பீடு செய்தது தவறு என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விடைத்தாள்
கரூர் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–
எனது மகள் சுசித்ரா, நடந்து முடிந்த பிளஸ்–2 தேர்வில் இயற்பியலில் 191 மதிப்பெண்ணும், வேதியியலில் 199 மதிப்பெண்ணும், உயிரியியலில் 197 மதிப்பெண்ணும் பெற்று இருந்தார். மருத்துவ படிப்பில் சேருவதற்கு 196 மதிப்பெண், கட்–ஆப் மதிப்பெண்ணாக உள்ளது. உயிரியல் பாடத்தில் மதிப்பெண் குறைவாக போடப்பட்டு இருப்பதாக கருதிய எனது மகள் அந்த பாடத்திற்கான விடைத்தாளை ஆன்–லைன் மூலம் பெற்றார்.ஒரு மதிப்பெண் குறைவு அதன் பின்பு மறுமதிப்பீடு செய்ய ஆன்–லைன் மூலம் விண்ணப்பித்தார். இந்த நிலையில் எனது மகள், வகுப்பு ஆசிரியையிடம் கேட்ட போது, மறுமதிப்பீடு செய்ய தேவையில்லை என்று கூறி உள்ளார். இதன்காரணமாகமறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தை செலுத்தவில்லை. இருந்த போதிலும் உயிரியல் பாட விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு எனது மகள் ஏற்கனவே பெற்ற மதிப்பெண்ணை விட ஒரு மதிப்பெண் குறைவாக பெற்றுள்ளதாக திருத்தம் செய்து அரசு தேர்வுத்துறை அறிவித்தது.இதன்காரணமாக, எனது மகள் ஏற்கனவே வைத்திருந்த கட்–ஆப் மதிப்பெண் 195.5 ஆக குறைந்து விட்டது. மறுமதிப்பீட்டுக்காக கட்டணம் எதுவும் செலுத்தாத நிலையில் எனது உயிரியியல் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்தது தவறு.
கட்–ஆப் மதிப்பெண்
எனவே, எனது மகள் ஏற்கனவே உயிரியியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண்ணான 197 மதிப்பெண்ணை வழங்க அரசு தேர்வுத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.அதன் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான கட்–ஆப் மதிப்பெண்ணை 196 என்று கணக்கிட மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
நீதிபதி கேள்வி
இந்த மனு நீதிபதி எஸ்.மணிக்குமார்முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் எம்.அஜ்மல்கான்,வக்கீல் எட்வின்பிரபாகர் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அரசு தேர்வுத்துறை இயக்குநர் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல், மனுதாரரின் மகள் ஆன்–லைனில் விண்ணப்பிக்கும் போது மறுமதிப்பீடு, மறுகூட்டல் ஆகிய இடங்களில் ‘டிக்‘ செய்துள்ளார் என்றும், அதன்காரணமாகவே மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.அப்போது நீதிபதி, ‘‘மனுதாரரின் மகள் மறுமதிப்பீட்டுக்கு கட்டணம் செலுத்தாத போது எப்படி மறுமதிப்பீடு செய்யலாம்?’’ என்று அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினார்.
தவறு
அதன்பின்பு நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:–‘
மனுதாரரின் மகள் மறுமதிப்பீட்டுக்கு ஆன்–லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அதற்கான கட்டணத்தை செலுத்தவில்லை. கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஆன்–லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தாலும் அவர் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் மறுமதிப்பீடு செய்யக்கோரிய மனுதாரர் மகளின் கோரிக்கையை அரசு தேர்வுத்துறை ஏற்று இருக்கக்கூடாது.எனவே, மறுமதிப்பீடு செய்தது தவறு.ஆகவே, மனுதாரரின் மகள் ஏற்கனவே உயிரியியல் பாடத்தில் பெற்று இருந்த மதிப்பெண்ணை உடனடியாக வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் அவருக்கு, மருத்துவ படிப்புக்கான கட்–ஆப் மதிப்பெண் 196 என்று நிர்ணயிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி