ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை 03.07.2013 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2013

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை 03.07.2013 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வருகிற ஆகஸ்டு மாதம் 17,18ஆம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பம் சமர்பிக்க 01.07.2013  கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டபூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதையடுத்துகல்வி மாவட்ட வாரியாக பெறப்பட்ட விண்ணபங்களை சரிப்பார்த்து, முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து,  விண்ணபங்களை 100 வீதம் அடுக்கி 03.07.2013 அன்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி