டி.இ.டி., தேர்வை 6 லட்சம் பேர் எழுதுகின்றனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2013

டி.இ.டி., தேர்வை 6 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

டி.இ.டி., தேர்வுக்கு, விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு, நேற்றுடன் முடிந்தது. ஆறு லட்சம் பேர், இந்த தேர்வை எழுதுகின்றனர். விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், நேற்று கடைசி நாள் என்பதால், கூட்டம் அலைமோதியது.அரசு பள்ளிகளில், காலியாக உள்ள, 15 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 17, 18 தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வை, டி.ஆர்.பி., நடத்துகிறது. இதற்காக, கடந்த மாதம், 17ம் தேதி முதல், 2,500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன. விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்கவும், நேற்று கடைசி நாள்.இதனால், மாநிலம் முழுவதும், விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், அனைத்து இடங்களிலும், கூட்டம் அலைமோதியது. சென்னை மாவட்டத்தில், 21 மையங்களிலும், விண்ணப்ப விற்பனை, விறுவிறுப்பாக நடந்தன.சென்னையில், நேற்று ஒரே நாளில், 5,000த்திற்கும் மேற்பட்டவர்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். எத்தனை லட்சம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர் என்ற விவரம், சரியாக தெரியவில்லை. எனினும், ஆறு லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்தனர், அவர்களில், ஆண்கள் எத்தனை பேர்; பெண்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை, ஓரிரு நாளில், டி.ஆர்.பி., வெளியிடும். 1,100 மையங்களில், இந்த தேர்வுகள் நடக்க உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி