1,000 ஓராசிரியர் பள்ளிகளில் பாடம் நடத்துவதில் சிரமம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2013

1,000 ஓராசிரியர் பள்ளிகளில் பாடம் நடத்துவதில் சிரமம்.

தமிழகத்தில், 1,000 துவக்கப் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவர்களே, ஐந்து வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் உள்ளது. காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,'' என, ராமநாதபுரத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர், ச.மயில் தெரிவித்தார். அவர், கூறியதாவது: தமிழகம் முழுவதும், 1,000க்கும் மேற்பட்ட துவக்கப் பள்ளிகளில், ஒரு ஆசிரியர்மட்டுமே உள்ளார்.அவர்களே
, ஐந்து வகுப்புகளுக்கு பாடங்களை நடத்துவதில் சிரமம் உள்ளது. இதனால், அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதுபோன்ற பள்ளிகளில், போதிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக, இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்க வேண்டும். ஆறாவது ஊதியக்குழுக்கு பின், இடைநிலை ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட, மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு முறையை ரத்துசெய்ய வேண்டும்.வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில், பணி நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி