கடந்த 2012 அக்டோபரில் இருந்து பிளஸ் 2 தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டுமென அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து2012 அக்டோபர் மற்றும் 2013 மார்ச்சில் தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை குறித்த விவரம் இடம் பெறவில்லை.இதனால் பார்வையற்ற தனித்தேர்வர்கள் முழு தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வு எழுதினர். இதையடுத்து ஆன்லைன் விண்ணப்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை குறிப்பிட வேண்டும். பள்ளியில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு வழங்கும் சலுகைகளை போல், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பார்வையற்ற தனித்தேர்வர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து பள்ளிக் கல்வி செயலர் சபிதா வெளியிட்ட அரசாணை:பள்ளியில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை போல், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கண்பார்வையற்ற தனித்தேர்வர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து முழுமையாகவிலக்கு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் 2013 செப்டம்பர் முதல் ஆன்லைன் விண்ணப்பத்தில் இடம்பெறும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aug 2, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி