கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு: சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2013

கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு: சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்.

"கல்வித் தகுதியுள்ள சத்துணவு உதவியாளர், சமையலர் அனைவருக்கும் அமைப்பாளர் பதவி உயர்வு வழங்கி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்" என, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு, கோவை தாமஸ் கிளப்பில் நடந்தது. மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தில், 30 ஆண்டுகளாக தொகுப்பூதியம், மதிப்பூதியம், வரையறுக்கப்படாத ஊதியம் வழங்கப்படுகிறது. சத்துணவு ஊழியர்களை பணிவரன் முறைப்படுத்தி,அமைப்பாளருக்கு 5,200 ரூபாய், சமையலர், உதவியாளர்களுக்கு4,800 ரூபாய் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கல்வித் தகுதியுள்ள சத்துணவு உதவியாளர், சமையலர் அனைவருக்கும் அமைப்பாளர் பதவி உயர்வு வழங்கி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மலைப்பகுதியில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு மலைப்படி, குளிர்காலப்படி வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போன்று சத்துணவு ஊழியர்களுக்கு மாதம் 3,050 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். விருப்ப ஓய்வு, மருத்துவ காரணங்களில் ஓய்வு பெறும்போது, ஓய்வு கால பலன்கள் அனைத்தையும் வழங்க வேண்டும்.சத்துணவு மையத்திற்கு வழங்கப்படும் சில்லறை செலவினத்தொகை 20 ரூபாய் என்பதை உயர்த்தி, 200 ரூபாய் வழங்க வேண்டும். வாரம் ஐந்து முட்டை, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை,பச்சைப்பயிறு போன்றவற்றை வேகவைக்க எரிபொருள் மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி