கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2013

கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் சந்திரன் தலைமையில் நடந்தது. செயலாளர் உக்கிரபாண்டி வரவேற்றார். பிரசார செயலாளர் சுரேஷ், துணை தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளுக்கான கலந்தாய்வு முறைகேடுகள் கண்டிக்கத்தக்கது; சம்பள உயர்வு தொடர்பான 3 நபர் குழு அறிக்கை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது; ஆசிரியர்களின் பத்து மற்றும் பிளஸ் 2 சான்றிதழ்களின் "உண்மைத் தன்மை" வழங்கும் அதிகாரத்தை, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்; ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் பழனிவேல்ராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி