மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் பெறுவதற்கான கூட்டுப் போராட்டத்திற்கு, அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் தமிழ்நாடு ஆரமப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அழைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2013

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் பெறுவதற்கான கூட்டுப் போராட்டத்திற்கு, அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் தமிழ்நாடு ஆரமப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அழைப்பு.

மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அண்மையில் தமிழக அரசு 88 அரசாணைகள் வெளியிட்டது. இதில் அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லாததையொட்டி தொடக்கக் கல்வித்துறையில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை  அறிவித்தன. எனினும் அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இணைந்து போராட வேண்டும்என்ற கோரிக்கை பரவலாக ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டது. ஏற்கெனவே ஒரு சில சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தது. தற்பொழுது தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியும் வரும் 18ம் தேதி அனைத்து சங்கங்களை அழைத்து கூட்டு போராட்டத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி