ஆசிரியர்கள் பற்றாக்குறை; கேள்விக்குறியாகும் கல்வி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2013

ஆசிரியர்கள் பற்றாக்குறை; கேள்விக்குறியாகும் கல்வி.

திருவண்ணாமலை:கலசப்பாக்கம் அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களே ஆசிரியர் ஆன அவல நிலை ஏற்பட்டுள்ளது.கலசப்பாக்கம் அடுத்த அணியாலை காம்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 106 மாணவர்களும், 107 மாணவிகளும் படிக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டாக இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. எட்டு ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் தலா இரண்டு அறிவியல் ஆசிரியர்கள், சமூக அறிவியல் ஆசிரியர் என நான்கு பேர் மட்டும் பணிபுரிகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றுவிட்டால் மாற்று ஆசிரியர்களுக்கு வழியில்லை, நிரந்தரமாக ஆசிரியர் பற்றாக்குறையால் தவிக்கும் சூழ்நிலையில்,ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றுவிட்டால் மேலும் சிக்கலான நிலை ஏற்படுகிறது.இதனால், பள்ளிக்கு விடுமுறை விடுவதை தவிர வேறு வழி இல்லாத நிலை ஏற்படும் போது மாணவர்களே ஆசிரியராக மாறி பாடம் நடத்துவதால், பள்ளிக்கு விடுமுறை விடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது.இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கடந்த எட்டாண்டுக்கு முன் பி.டி.ஏ., மூலம் அரசுக்கு, 2 லட்ச ரூபாய் வைப்புத் தொகை செலுத்தப்பட்டும், இன்று வரை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படவில்லை. இப்பள்ளிக்கு போதிய கட்டிட வசதி இருந்தும் கூட மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படவில்லை."மாணவர்களின் நலன் கருதி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்" என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி