ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீசஸ் என்ற தேர்வை யு.பி.எஸ்.இ. நிறுவனம் நடத்தி வருகிறது. தேர்வு 3 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் நிலை தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய 3 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்நிலைதேர்வில் வெற்றி பெற்றவர்கள் மெயின் தேர்வை எழுதலாம். மெயின்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு செல்லலாம். மெயின் தேர்விலும், நேர்முகத்தேர்விலும் சேர்த்துஎடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது.அதிக மார்க் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். முடிவு வெளியீடு இந்த வருடம் கடந்த மேமாதம் 26–ந்தேதி இந்திய அளவில் உள்ள 1000 பணியிடங்களுக்கு இந்த முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதினார்கள். நாடு முழுவதும் 46 நகரங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 136 மையங்களில் 27 ஆயிரம் பட்டதாரிகள் இந்த தேர்வை எழுதி இருந்தனர். முதல் நிலை தேர்வுமுடிவு நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் 14 ஆயிரத்து 959 பேர் தேர்ச்சி பெற்றனர்.மனிதநேய மையம் சென்னையில் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பட்டதாரிகளுக்கு இலவசமாக ஐ.ஏஸ்.எஸ். படிப்பிற்கான பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வில் 193 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு மனிதநேய மையத்தில் பதிவு செய்து இலவசமாக பயிற்சி பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது. முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும். மெயில் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு மார்ச் மாதம் நேர்முகத்தேர்வு டெல்லியில் நடைபெறும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி