டில்லியில் பயங்கர நிலநடுக்கம்: பாகிஸ்தானை மையமாக கொண்டு நிகழ்ந்தது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2013

டில்லியில் பயங்கர நிலநடுக்கம்: பாகிஸ்தானை மையமாக கொண்டு நிகழ்ந்தது.

டில்லியில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. பாகிஸ்தானை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடஇந்திய மாநிலங்களான டில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் கட்டடங்கள்குலுங்கியதால் மக்கள் பீதியில் வெளியே வந்தனர். வடஇந்தியா முழுவதும் இந்த நிலநடுககம் உணரப்பட்டது.இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் தென்கிழக்கே 250 கி.மீ. தொலைவில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தினை மையமாக கொண்டு நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரிக்டர் அளவு கோலில்7.8 ஆக பதிவானதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் பாகிஸ்தானில் உயிர் சேதம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி