டிஇடி தேர்வு விவகாரம் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து பட்டதாரிகள் மேல்முறையீடு!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2013

டிஇடி தேர்வு விவகாரம் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து பட்டதாரிகள் மேல்முறையீடு!!!

சான்று சரிபார்ப்பு முடித்த பட்டதாரிகளும் டிஇடி தேர்வு எழுத வேண்டும் என்று ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ் நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.இது குறித்து தமிழ்நாடு
பதிவு மூப்புபட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர்ரத்தினகுமார் கூறியதாவது:ஆசிரியர் பணிக்கு தகுதியான பி.எட் முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த 30 ஆயிரம் பட்டதாரிகளுக்கு கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் சான்று சரிபார்ப்பு செய்தது. அதில் 22ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.மீதம் உள்ள 8ஆயிரம்பேருக்கு பணி கிடைக்கவில்லை.இதற்கிடையே ஆசிரியர்தகுதி தேர்வு நடத்த அரசு அறிவித்தது.சான்று சரிபார்ப்பு முடித்த 8 ஆயிரம் பேரில் 95 பேர் தங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த ஜூலை9-ம்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.சான்று சரிபார்ப்பு முடித்தவர்கள்ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதில்இருந்து விலக்களித்தும்,இனிவரும்பணியிடங்களில்இவர்களை நேரடி பணி நியமனம் செய்யலாம்என்றும் நீதிபதிகள் எலிபி தர்மராவ்,வேணுகோபால் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.இந்த தீர்ப்பை பின்பற்றி மதுரை ஐகோர்ட்கிளை நீதிபதி மணிக்குமார்,கடந்த வாரம் 75 பேருக்கு பணி நியமனம் வழங்கலாம் எனதீர்ப்பளித்தார். இதையடுத்து,மேலும் 700 பட்டதாரிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் நாங்களும் மேற்கண்ட தேதியில்சான்று சரிபார்ப்பு முடித்துள்ளோம்.எங்களுக்கும் தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க வேண்டும்என்று கேட்டனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன், பட்டதாரிகள் ஆசிரியர் தகுதி தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்என்று கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டார். இந்ததீர்ப்பை எதிர்த்து நாங்கள் விரைவில்மேல்முறையீடு செய்வோம்.இவ்வாறு ரத்தினகுமார் கூறினார் .

4 comments:

  1. Padithu pass panni valaiku vanga

    ReplyDelete
  2. Appo Enga kooda cv attend panna 24000 per job la join pannanga avangalum TET elutha sollunga

    ReplyDelete
  3. summa courtil vazakku thodaramal padithu TETla pass pannunga, adudan ungalaku udhavum

    ReplyDelete
  4. unemployed teachers did nearly 6 months hard work for passing TET exam in this year for surviving their life and their families, so my dear friends getting stay orders in court is injustice. instead of getting stay order , please do hard work, god ll surely give us postings.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி