ஊதிய முரண்பாட்டை உடனடியாக களைய வேண்டும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2013

ஊதிய முரண்பாட்டை உடனடியாக களைய வேண்டும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை.


முதுகலை ஆசிரியர் களுக்கான ஊதிய முரண்பாட்டை உடனடியாக களைய வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு
மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத் தின் மாவட்ட செயற்குழு கூட்டம் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்றது.கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் சாமி துரை தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் காம ராஜ் அனைவரையும் வர வேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். தலைமையிடச் செய லாளர் வரதராஜன், உடையார் பாளையம், அரியலூர் கல்வி மாவட்டத்தலைவர் சிவமணி, பாண்டியன், மாவட்டத் துணைத் தலைவர் ராஜேந் திரன், மாவட்ட இணை செயலாளர் பிரிட்டோ ஜெக நாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தமிழன், கென்னடி ஆகியோர் சிறப் புரையாற்றினர்.

ஊதிய முரண்பாடு

கூட்டத்தில் பணி விதி 720 உடனடியாக நீக்க வேண்டும். மேல்நிலைக்கல்விக்கென தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும், விடைத்தாள்கள் திருத்துவதற்கு தாள் ஒன்றுக்கு ரூ.25 வழங்கிட வேண்டும், முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாட்டை உடனடியாக களைய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் மாவட்ட பொருளா ளர் காந்தி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி