அரசுப் பள்ளி மாணவியருக்கு உளவியல் ஆலோசனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2013

அரசுப் பள்ளி மாணவியருக்கு உளவியல் ஆலோசனை.


பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவியருக்கு, உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள்
மேல்நிலைப் பள்ளியில், பொதுத்தேர்வு எழுதவுள்ள, எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 மாணவியரை, தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு, மாவட்டக் கல்வித் துறை சார்பில், உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது.உதவி தலைமையாசிரியர் மணி தலைமை வகித்தார். உளவியல் ஆலோசகர் பிரவீன்குமார், தேர்வு நேரத்தில் மன ரீதியாக ஏற்படும் பிரச்னை, கோபத்தை கட்டுப்படுத்துதல், பாடங்களை கவனித்தல், ஞாபக சக்தி மேம்படுத்தல், இளமையில் ஏற்படும் பிரச்னை மற்றும் எதிர்கொள்ளுதல் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி