தரமான, இலவச கல்வி அளிக்கவலியுறுத்தி, அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின், இரண்டு நாள் மாநாடு, அசாமில், நவ., 27 ம்தேதி முதல், நடைபெறும்" என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர்
ஜோசப் சேவியர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின், 26 வது மாநாடு, அசாம், கவுகாத்தியில், நவ., 27,2 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அகில இந்திய பொது செயலாளர் ஈஸ்வரன் ஏற்பாடுகளை செய்து வருகிறார். "அனைவருக்கும் தரமான இலவச கல்வி அளிக்க வலியுறுத்தி" மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்கான வழி வகைகள், செயல்படுத்தும் விதம் குறித்து, கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங், மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பல்லம் ராஜூ, என்.சி.ஆர்.டி., இயக்குனர் உட்பட கல்வித்துறையினர் பங்கேற்க உள்ளனர். ஆசிரியர் சமுதாயத்தின் இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், நவ., 25 முதல் 2 நாட்கள் பயிற்சிகள் நடைபெறும். தமிழகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாநாட்டில் பங்கேற்க உள்ளனர், என்றார். புரவலர் பொன்ராஜ், மாநில செயற்குழு பாண்டியராஜன் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி