மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே விண்ணப்பம் அறிமுகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே விண்ணப்பம் அறிமுகம்.


மத்திய அரசு ஊழியர்களின்,பணிக்கொடை,வருங்கால வைப்பு நிதி,குரூப் இன்சூரன்ஸ் திட்டங்கள் போன்றவற்றில் பலன் பெறுவதற்கு,தனித்தனியாக
விண்ணப்பிக்கும் நடைமுறையை மாற்றி,ஒரே விண்ணப்பமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசுஊழியர்கள்,பணி ஓய்வுக்குப் பிறகு,தங்களின் பணிக்கொடை,வருங்கால வைப்பு நிதி திட்டம்,குரூப் இன்சூரன்ஸ் திட்ட பலன்களைப் பெறுவதற்கு,தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இந்த நடைமுறையை மாற்றி,அனைத்து பணப்பலன்களுக்காகவும்,ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கும் வகையில்,நடைமுறையை எளிதாக்க,மத்திய பணியாளர் மற்றும் பென்சன்தாரர் நலத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி,பணிக்கொடை,வருங்கால வைப்புநிதி,குரூப் இன்சூரன்ஸ் ஆகியவற்றுக்கு,பொது விண்ணப்பம் -1ம்,பென்சன்தாரர்கள் தொகுப்பு பென்சன் பெறுவதற்கு,விண்ணப்பம் -2ம் அறிமுகப்படுத்தப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி