பி.எஃப். ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2013

பி.எஃப். ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.


ஓய்வூதியதாரர்கள் அனைவரும் உயிர்வாழ் சான்றிதழை (லைப் சர்டிபிகேட்) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து
வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எஃப்) திட்டத்தின் கீழ் ஓய்வூதியம்பெறும் அனைவரும் உயிர்வாழ் சான்றிதழை டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கியின் கிளை மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த சான்றிதழில் தங்களின் ஓய்வூதிய ஆணை எண்ணையும், செல்போன் எண்ணையும் அவசியம் குறிப்பிட வேண்டும். விதவை ஓய்வூதியதாரர்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்ற சான்றிதழையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்காதவர்களுக்கு 2014-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி