ஆதிதிராவிடர் நலப்பள்ளியை இணைக்கமுதுகலை பட்டதாரி ஆசிரியர் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2013

ஆதிதிராவிடர் நலப்பள்ளியை இணைக்கமுதுகலை பட்டதாரி ஆசிரியர் கோரிக்கை.


ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகளை, மாநில அரசின் பள்ளி கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும்' என, முதுகலை பட்டதாரி,
ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம், நேற்று முன்தினம், திருச்சி காஜாமியான் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.மாநில தலைவர் மணிவாசகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பாலசுப்பிரமணியன், அமைப்பு செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:ஊதிய முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் டிசம்பர், 7ம் தேதி சென்னை தலைமை செயலகத்தை நோக்கி பேரணி நடத்த வேண்டும். முதுகலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியமாக, 2 ஆயிரத்து, 500 ரூபாய் வழங்க வேண்டும்.முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள அரசு உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை, கள்ளர் சீரமைப்புத் துறை போன்ற இதர துறைகளில் கீழ் இயங்கும் பள்ளிகளை, பள்ளி கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும்.30 ஆண்டுகள் ஒரே பதவியில் தொடர்ந்து பணியாற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்பு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி