இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை இடஒதுக்கீடு முறையில் அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2013

இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை இடஒதுக்கீடு முறையில் அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்.


திருச்சி-இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான தகுதித்தேர்வை இடஒதுக்கீடு முறையில் அமல்படுத்தக்கோரி
திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் புதிதாக இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தகுதி தேர்வினை இடஒதுக்கீடு முறையில் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி திருச்சி மாவட்டம் சார்பில் திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர் விளக்கவுரையாற்றினார்.

இடஒதுக்கீடு முறையில்


கொள்கை பரப்பு செயலாளர் குணா,மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் தினகரன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலு,மாநகர் மாவட்ட துணை செயலாளர் ரமேஷ்,சிறுபான்மைபிரிவு செயலாளர் ஹைதர்அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதிதேர்வினை இடஒதுக்கீடு முறையில் அமல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.முன்னதாக மாணவரணி செயலாளர் கோபி வரவேற்றார். முடிவில் அசோக் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி