ஆசிரியர் நிதிசார் கல்வியறிவு பயிற்சி: விருதுநகரில் நாளை துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2013

ஆசிரியர் நிதிசார் கல்வியறிவு பயிற்சி: விருதுநகரில் நாளை துவக்கம்.


பள்ளி ஆசிரியர்களுக்கான நிதிசார் கல்வியறிவு தொடர்பான பயிற்சி விருதுநகரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.
பள்ளிகல்வித்துறை உத்தரவுப்படி மாவட்ட வாரியாக 9ம்வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு நிதிசார் கல்வியறிவு பயிற்சி அளிக்கப்படுகிறது.இதை, சென்னை தேசிய பங்குச் சந்தை பிரதிநிதிகள் அளிக்கின்றனர். நாளை(நவ.,6), விருதுநகர் கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு சமூகஅறிவியல் ஆசிரியர்களுக்கும், நாளை மறுநாள் 12ம் வகுப்பு பொருளாதார பிரிவு ஆசிரியர்களுக்கும் இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருதுநகரைச் சேர்ந்த 45 ஆசிரியர்கள், தூத்துக்குடியைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் கலந்துகொள்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி