பள்ளிக்கு பிளாஸ்டிக் பைகளை மாணவர்கள் எடுத்து வர தடை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2013

பள்ளிக்கு பிளாஸ்டிக் பைகளை மாணவர்கள் எடுத்து வர தடை.


பள்ளியில் மாணவர்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு வரக்கூடாது, என தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக் கூடாது, என
கூடலூர் நகராட்சியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், கூடலூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. சுகாதாரத் துறையினர் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.தொடர் நடவடிக்கை இல்லாததால், மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது. இச்சூழ்நிலையில், மாணவர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் கூடலூர் என்.எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு வர தடை விதித்துள்ளனர்.தினந்தோறும் தின்பண்டங்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவது அதிகமாக இருந்தது. இதனை பள்ளி வளாகத்திலேயே ஆங்காங்கே போட்டு சென்றனர். இதனை தடுக்கும் பொருட்டும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், பிளாஸ்டிக் பைகளை மாணவர்கள் கொண்டு வரக்கூடாது, என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளியின் நுழைவுப் பகுதியிலேயே மாணவர்களிடம் பிளாஸ்டிக் உள்ளதா என்று சோதனை நடத்திய பிறகே பள்ளிக்குள் அனுமதிக்கின்றனர். இந்த விழிப்புணர்வை அனைத்துப் பள்ளிகளிலும் ஏற்படுத்தினால், மாணவர்கள் மூலம் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வாய்ப்பு ஏற்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி