10 மணிக்கு பொதுத்தேர்வு: தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2013

10 மணிக்கு பொதுத்தேர்வு: தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்.


அரசு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றக்கூடாதென, தலைமை ஆசிரியர்கள் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருவண்ணாமலையில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில பொது செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட அனைத்து மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.மத்திய அரசுக்கு இணையான சம்பளத்தை தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். அனைவருக்கும் கல்வி திட்டத்தில், வட்டார வளமைய கண்காணிப்பாளராக பணிபுரிந்த ஆசிரியர்களை, அதே வட்டார வள மையங்களின் கண்காணிப்பாளராக நியமிக்க வேண்டும்,அண்மையில், அரசு பொது தேர்வு நேரத்தை, 9.15 என மாற்றம் செய்யப்பட்டது. கிராமப்புற மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், காலை 10 மணிக்கே தேர்வு நேரத்தை மாற்ற வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், அரசு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் எனப்பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இக்கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடில், அனைத்து ஆசிரியர்கள் அமைப்பை ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும், தலைமை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி