விரைவுரையாளர் தகுதி தேர்வு: திருச்சியில் 29ம் தேதி நடக்கிறது - 10 மையங்கள் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2013

விரைவுரையாளர் தகுதி தேர்வு: திருச்சியில் 29ம் தேதி நடக்கிறது - 10 மையங்கள் அறிவிப்பு.


பல்கலைக்கழக நிதிநல்கை குழுவினரால் (யூஜிசி) இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தகுதித் தேர்வு வரும் 29ம் தேதி நடக்கிறது. இதற்காக திருச்சியில்
10 மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி, நேஷனல் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம் ஹோலி கிராஸ் கல்லூரி, திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்ட வன் கலை மற்றும் அறிவியி யல் கல்லூரி, திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே ஆர்சி மேல்நிலைப்பள்ளி, திருச்சி காவேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, அண்ணாமலை நகர் காவேரி மகளிர் கல்லூரி, அண்ணாமலை நகர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, பெரியார் ஈவெரா கல்லூரி,ஜமால் முகமது கல்லூரி ஆகிய இடங்களில் பாடம் வாரியாக தேர்வு நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை தேர்வு மையமாக தேர்வு செய்து விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தங்களது தேர்வு எழுதும் மையத்தினை பல்கலை கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ள லாம். தேர்வுக்கான அனுமதிச்சீட்டு பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு தேர்வு ஒருங்கிணைப்பாளரால் வழங்கப்பட மாட்டாது.பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச்சீட்டில் தங்களது புகைப்படம் ஒட்டி அதில் கிரேடு 1 கெஸட்டடு ஆபீசர் சான்றொப்பம் பெற்று தேர்வுக்கு எடுத்து வர வேண்டும்.தேர்வுக்கான விதிமுறைகளை பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு இணையதளத்தில் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்மேலும் விபரங்கள் தேவைப்படுவோர் தேர்வு ஒருங்கிணப்பாளர் டேனியல் தொலைபேசி எண் 0431-2407057, கைபேசி எண் 98944-37647 மற்றும் இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி