பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கு ஒரு நாள்விடுமுறை மாணவர் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2013

பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கு ஒரு நாள்விடுமுறை மாணவர் கோரிக்கை.


வரும், மார்ச் 3 முதல் 25ம் தேதி வரை பிளஸ் 2தேர்வுகளும், மார்ச் 26 முதல், ஏப்., 9ம் தேதி வரை, பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வுகளும் நடக்கின்றன.தேர்வின்போது,
மாணவர்கள்தங்களை தயார்படுத்தி கொள்வதற்கு வசதியாகஇடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மார்ச் 6ல் நடைபெறும், பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாளுக்கும்,அடுத்த நாள் நடைபெற உள்ள, இரண்டாம் தாளுக்கும்இடையில், விடுமுறை இல்லாததால் மாணவர்கள்பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள,வால்பாறை அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்கள்பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்பியுள்ள புகார் மனு:
தமிழ் இரண்டாம் தாள் எழுதி, நாங்கள்வீடுகளுக்கு சென்று சேர்வதற்கே, மாலை, 6:00மணியாகி விடும். இந்நிலையில், பிற பாடங்களைகாட்டிலும், ஆங்கிலம், புரிந்து கொள்ளகடினமானது. எனினும், தேர்வுக்கு காலஅவகாசம்வழங்கவில்லை. இதனால், தேர்வு எழுத சிரமம் ஏற்படும்.இதற்கு பள்ளிக் கல்வித் துறை,நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு,அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.நரசிபுரம் அரசு பள்ளி ஆசிரியர் பகத்சிங் கூறுகையில்,""பெரும்பாலும், அரசு பள்ளி மாணவர்கள், ஆங்கிலத்தில்தோல்வியடைவதால் தான், அரசு பள்ளிகளில்,தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுகிறது. இரண்டாம் தாள்தேர்வுக்கு முன், மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வது அவசியம். கடந்தாண்டில், அரசு பள்ளிகளில், ஆங்கில பாடத்தால் தான், தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதுஎன்பதை,நினைவில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்."தமிழ் முதல் தாள் தேர்வு, மார்ச் 3ல் நடக்கிறது. இரண்டாம் தாள் தேர்வு, 5ல் நடக்கிறது. இடையே,ஒரு நாள்விடுமுறை. தமிழ் பாடத்திற்கு அளிக்கும் விடுமுறையை,ஆங்கில தேர்வுகளுக்கு அளித்திருக்கலாமே' என,மாணவரும், ஆசிரியரும் ஆதங்கப்படுகின்றனர்.

தேர்வுத்துறை வட்டாரம் கூறியதாவது:தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், படிப்பதற்கு பெரிதாகஒன்றும் இல்லை.எனவே,அன்றைய நாளில், ஆங்கிலம்தேர்வுக்கு தயாராகலாம். ஓராண்டு முழுவதும் படித்த மாணவர், கடைசியில்,ஒரு நாள் இடைவெளி இருந்தால் தான்,தேர்வுக்கு, தயாராக முடியும் என, கூறுவது, சரியா என்பதையும்பார்க்க வேண்டும். ஒரு நாள், தேர்வை தள்ளி வைத்தால், அப்படியே, மற்ற தேர்வுகளின் தேதியும் தள்ளிப் போகும்.எனினும், மாணவர் கோரிக்கை, பரிசீலிக்கப்படும்.இவ்வாறு தேர்வு வட்டாரம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி