சென்னை மாநகராட்சி ஆசிரியைகள் பணி நிரந்தரம் எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2013

சென்னை மாநகராட்சி ஆசிரியைகள் பணி நிரந்தரம் எப்போது?


சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், உரிய பயிற்சி முடித்தும், பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இதுகுறித்து, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

92 ஆசிரியைகள் :

தற்போது, மாநகராட்சி வசம், 40 மழலையர் பள்ளிகள் உள்ளன. அவற்றில், 92 ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். அவர்களை தவிர, வகுப்பறைக்கு ஒரு ஆயா, பள்ளிக்கு ஒரு அலுவலக உதவியாளர் பணியில் உள்ளனர். துவக்கத்தில், அவர்கள் அனைவரும், தற்காலிகமாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், 25 ஆசிரியைகள், ஆயாக்கள், அலுவலக உதவியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆசிரியைகள், 67 பேர் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

பயிற்சி அளித்தும்... :

அவர்கள் அனைவரும், அங்கீகாரம் இல்லாத நிறுவனத்தில், ஓராண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பயிற்சி முடித்ததாக காரணம் கூறப்பட்டது. இதை அடுத்து, அந்த ஆசிரியர்கள் அனைவருக்கும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், மாநகராட்சி சார்பில், ஆறு மாதம், மழலையர் பள்ளி ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சிக்கு பின், அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், சம்பளத்தில் வித்தியாசம், விடுப்பு உட்பட, பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக,அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

தடுக்க முடியாது :

இதுகுறித்து மாநக ராட்சி கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,மழலையர் பள்ளி ஆசிரியைகளில் இரண்டு ஆண்டு பயிற்சி முடித்தோர் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். ஓராண்டு பயிற்சி முடித்தவர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான கோப்பு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்றார்.மேலும் அவர் கூறுகையில், தங்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி ஆசிரியைகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்களை பணிக்கு தேர்வு செய்யும் போது, இரண்டு ஆண்டு பயிற்சி முடித்திருக்க வேண்டும் என, குறிப்பிட்டு சொல்லப்படவில்லை. அதனால், ஓராண்டு பயிற்சி முடித்த ஆசிரியைகளின் பணி நிரந்தரத்தை யாராலும் தடுக்க முடியாது. ஆனாலும், அரசின் ஒப்புதல் கிடைக்காததால், பணி நிரந்தரம் தாமதமாகி வருகிறது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி