பள்ளி மாணவ மாணவியர் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் அருகே பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனை போன்று பள்ளிகள், கல்லூரிகள் அருகே
டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால், பல்வேறு அரசு பள்ளிகள் போதிய காம்பவுண்ட் சுவர் ஏதுமின்றி திறந்த வெளிகளாக உள்ளன. இங்கு எந்த நேரமும் வெளியாட்கள்நடமாட்டம் உள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் உள்ள பொருட்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறி பள்ளி வளாகங்களில் வெளியாட்களை நடமாடுவதை தடை செய்ய வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக அரசு முதன்மை செயலாளர் சபிதா உத்தரவு பிறப்பித்திருந்தார்.இந்தநிலையில் தற்போது பள்ளி வளாகத்தில் புகைபிடிப்பதை தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் சார்ந்த இடங்களில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டினை தடை செய்து உத்தரவிடப்படுகிறது. அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் ‘இது புகைபிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி’, இங்கு புகைபிடித்தல் தண்டனைக்குரிய குற்றம்‘ என்று அறிவிப்பு பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி