தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு ஊக்க விருது வழங்க வேண்டும் என ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் நகரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின்
மாவட்டசெயற்குழுகூட்டம் மாவட்டதலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. வெண்ணந்தூர் வட்டார செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார்.மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுரளி, மாவட்ட செயலாளர் தங்கவேல், முன்னாள் பொதுச்செயலாளர் முருகசெல்வராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், உயர்கல்வி படிக்க முன்னேற்பு ஆணை கிடைக்க பெறாத ஆசிரியர்களுக்கு பின்னேற்பு ஆணைகள் வழங்க வேண்டும். 25 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊக்க விருது வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பொங்கல் பண்டிகைக்குள் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி