கோரிக்கையை ஏற்காவிட்டால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2014

கோரிக்கையை ஏற்காவிட்டால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு.


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப் போவதாக முதுநிலை பட்டதாரிஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட அறிக்கை:
அரசாணை 720ல் மாற்றம் செய்து உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தினோம்.ஆனால் அரசு தரப்பில் உரிய நடவடிக்கை இல்லை. அதனால் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணிப்பது என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே முதுநிலை பட்டதாரிகள் கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி