விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு- முதுகலை ஆசிரியர்கள் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2014

விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு- முதுகலை ஆசிரியர்கள் எச்சரிக்கை


தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் 25-ம் தேதி ஈரோட்டில் நடந்தது.ஊதிய முரண் பாட்டை களைவது, அரசாணை எண் 720-ல் மாற்றம் செய்து பதவி உயர்வு வழங்குவது,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.மாணவர்கள் நலன் கருதி பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்த தேர்வுத்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என்றும், மார்ச் இறுதிக்குள் மாநில நிர்வாகிகளை அழைத்துப்பேசி உரிய தீர்வு காணப்படாவிட்டால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்பது என்றும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக மாநில தலைவர் ஜி.சுப்பையா, மாநில பொதுச் செயலாளர் ஆர்.விஜயகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி