அரசு பள்ளியில் ஆங்கில பயிற்சிக்கு ஆய்வுக்கூடம்: திருச்சியில் அமைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2014

அரசு பள்ளியில் ஆங்கில பயிற்சிக்கு ஆய்வுக்கூடம்: திருச்சியில் அமைப்பு


தமிழகத்திலேயே முதன்முறையாக, ஆங்கில பயிற்சி ஆய்வுக்கூடம், திருச்சி அரசுப்பள்ளியில் அமைகிறது.அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில கற்றலை எளிமை படுத்துவதற்காக, தமிழக அரசு ஆங்கில பயிற்சி ஆய்வுக்கூடம் அமைக்க
உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்திலேயே முதன்முறையாக, திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பயிற்சி ஆய்வுக்கூடம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.ஆங்கில பயிற்சி ஆய்வுக்கூட்டத்துக்கு, 25 லட்சம் ரூபாய் செலவில், 30 கம்ப்யூட்டர், ஆடியோ சிஸ்டம், சாஃப்ட்வேர், சேர், பிரிண்டர், ஜெராக்ஸ் இயந்திரம் ஆகியவை வாங்கப்பட்டுள்ளது.பணிகள் நிறைவு பெற்றதும், முதலில் சோமரசம்பேட்டை பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிஅளிக்கப்படுகிறது. அதன் பிறகு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்ளை ஆய்வு கூடத்துக்கு அழைத்து வந்து பயிற்றுவிப்பார்கள். மாவட்டத்தில் உள்ள இதர பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், பின் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கும் பயிற்சிஅளிக்கப்படவுள்ளது.ஆய்வுக்கூட ஏற்பாடுகளை இடைநிலை கல்வித்துறை இணை இயக்குனர் முத்துகுமாரசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார் ஆகியோர் சமீபத்தில் ஆய்வு செய்தனர்.திருச்சியை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், இரண்டாயிரம் அரசு பள்ளிகளில் ஆங்கில பயிற்சி ஆய்வு கூடம் அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி