ஆசிரியர்களின் கட்டாய டியூஷன் - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2014

ஆசிரியர்களின் கட்டாய டியூஷன் - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை.


மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து, கட்டாய டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.அரசு மற்றும் அரசு உதவிப்பெறும்
பள்ளிகளில், மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து, கட்டாய டியூஷன் எடுக்கும் வழக்கம், ஆசிரியர்களிடையே பரவலாக உள்ளது.இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. டியூஷன் சேர முடியாத மாணவர்கள், ஒதுக்கப்படும் நிலை உருவாகிறது மற்றும் ஆசிரியர்களின் பணி அக்கறையும் குறைகிறது.

தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களிடம் மட்டுமே அவர்கள் தனி அக்கறை காட்டுகின்றனர். பிற மாணவர்களை கண்டுகொள்ளாமல் விடும் சூழல்ஏற்படுகிறது.எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்தகைய நடவடிக்கைகளை ஆசிரியர்கள் கைவிட வேண்டும். இல்லையேல், அத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி