விரைவில் ஏடிஎம்மை பயன்படுத்த சேவைக் கட்டணம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2014

விரைவில் ஏடிஎம்மை பயன்படுத்த சேவைக் கட்டணம்.


வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வங்கிக்கு 20 ரூபாய் செலவு ஆவதாக வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது. வங்கிக் கிளையில் நேரடியாக வாடிக்கையாளர் பெறும் சேவைக்கு 40 ரூபாய் செலவாகும் நிலையில்,
ஏடிஎம்மில் அது பாதியாக குறைவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏடிஎம்கள் இப்போது செயல்பட்டு வரும்நிலையில், ஏடிஎம் சேவைக்கான கட்டணம் குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என வங்கித் துறை உயரதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். ஏடிஎம்களில் 24 மணி நேர பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் வசதிகளை ஏற்படுத்துவதில் வங்கிகள் ஈடுபட்டு வருகின்றன. அதனால் ஏற்படும் கூடுதல்செலவை சமாளிக்க, ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி