மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு: மார்ச் மாதம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு: மார்ச் மாதம் அறிவிப்பு


மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள்,
30 லட்சம் பென்ஷன்தாரர்கள் பயனடைவார்கள்.இது குறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில், ""ஆரம்ப கால மதிப்பீட்டின்படி இந்த ஆண்டு 10 சதவீதத்திற்கு குறைவாக அகவிலைப்படி இருக்காது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிடப்பட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதற்கான முறையான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகலாம்'' என்று தெரிவித்தனர்.இதற்கிடையே, மத்திய அரசு ஊழியர்கள் பிப்ரவரி 12 முதல் 2 நாள்கள் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி