கணிதப்பாடத்துக்கு 25 இண்டர்னல் மார்க் வழங்கிட கணித முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2014

கணிதப்பாடத்துக்கு 25 இண்டர்னல் மார்க் வழங்கிட கணித முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை.


தமிழ்நாடு கணித முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலப்பொதுக் குழுக் கூட்டம் ராசிபுரம் ஞானமணி கல்லூரி வளாகத்தில்ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில்,

அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.விஜயகுமார் தலைமைவகித்தார்.பொதுச் செயலாளர் வி.எஸ்.ராஜா வரவேற்றார்.

விருதுநகர் மாவட்டம் பள்ளித்தலைமை ஆசிரியர் வருதராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், கணித, வணிக கணிதப் புத்தகங்கள் தயாரிக்கும் போது பாட நேரத்தைக் கருத்தில் கொண்டு தயாரிக்க வேண்டும். மாணவர் நலன் கருதி,தேவையான கணக்குகளை மட்டும் கொடுத்து, அதற்கு மேலான கணக்குகளை சிபிஎஸ்இ., ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பாடத் திட்டத்தில் உள்ளது போல ஒரு துணைநூல் உருவாக்கி அதில் இடம் பெறச் செய்ய வேண்டும். பிற மாநிலங்களில் உள்ளது போல, அனைத்து வகுப்புகளிலும் பாடத்திட்டத்தில் உள் மதிப்பெண் முறையை உருவாக்கி, 25 சத மதிப்பெண் வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.அரங்கண்ணல்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வை.குமார், மாநிலப் பொருளாளர் டி.எஸ்.ராஜசேகரன், மாநில நிர்வாகிகள் பழனி, சேகர் மற்றும் கணிதமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்ட, மாநில நிர்வாகிகள்,உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி