சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பதவியை கைப்பற்ற....போட்டி ! ரூ.3 லட்சம் விலை கொடுக்க ஆசிரியர்கள் தயார்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2014

சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பதவியை கைப்பற்ற....போட்டி ! ரூ.3 லட்சம் விலை கொடுக்க ஆசிரியர்கள் தயார்!


மதுரை மாவட்டத்தில், காலியாக உள்ள முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவியை கைப்பற்றஆசிரியர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக 3 லட்சம் ரூபாய் வரை பேரம் நடப்பதாகவும்,
அதற்கு பலர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.முதன்மை கல்வி அலுவலருக்கு, மேல்நிலை பள்ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு என இரண்டு நேர்முக உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இதில், உயர்நிலை பள்ளிகள் நேர்முக உதவியாளராக இருந்தசீனிவாசன், பதவி உயர்வில், சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலராகசென்றதால், அந்த பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.பொதுவாக, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், இப்பதவிக்கு விருப்பம் தெரிவிப்பர். வயது மற்றும் பணி மூப்பு, அனுபவம், அலுவலக நடைமுறைகளை நன்கு தெரிந்தவர் மற்றும் பணிக்காலத்தில் புகார்களுக்கு ஆளாக இருப்பது போன்ற அடிப்படையில், பள்ளிக் கல்வி இயக்குனரே நேர்முக உதவியாளரை தேர்வு செய்வார்.ஆனால், மதுரையில் இப்பதவியை பெற ஆசிரியர்களுக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சங்கங்களும் களத்தில் இறங்கி, தங்கள் சங்க நிர்வாகிகளைகொண்டுவர கடும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதனால், எப்போதும் இல்லாத வகையில், இப்பதவிக்கு தற்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாவட்ட கல்வித் துறையில், அதிகாரிக்கும், ஆசிரியர்கள், சங்கங்களுக்கும் பாலமாக இருக்கும் பதவி இது. மாவட்டத்தில் மூத்த லைமையாசிரியருக்கே இதை வழங்க வேண்டும்.

ஆனால், சிலர், பணம் மற்றும் சிபாரிசு அடிப்படையில் பெற்று விடுகின்றனர். 3 லட்சம் ரூபாய் கொடுத்து பதவியை கைப்பற்றினால், அங்கு ஊழல் நடக்காமல் இருக்குமா? எனவே தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும், என்றார்.

1 comment:

  1. very good... very good... we are teach in against to OULAL???????????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி