64 நடுநிலைப்பள்ளிகளில் கணித ஆய்வகம்!ரூ.1.28 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2014

64 நடுநிலைப்பள்ளிகளில் கணித ஆய்வகம்!ரூ.1.28 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு.


மாநிலம் முழுவதும், தேர்வு செய்யப்பட்ட 64 நடுநிலைப்பள்ளிகளில் 'கணிதம் கற்றல் திறனை மேம்படுத்துதல்' என்ற திட்டத்தில், முதல் முறையாக கணித ஆய்வகம் அமைக்க 1.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களின் அடிப்படை கணிதம் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், கணித ஆய்வகங்கள் நடுநிலைப்பள்ளிகளில் அமைக்க தொடக்கக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இத்திட்டம் செயல்படுத்த, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கணிதம் என்பது அனை வரது வாழ்விலும், ஒன்றிணைந்த பாடம். இதில், போதிய அடிப்படை புரிதல் இன்மையால், தேர்வுகளில் கணித பாடத்தையும் பிற பாடங்களை போன்று மனப்பாடம் செய்து எழுதும் அவலநிலைதான் தற்போது உள்ளது. இதனால், மாணவர்களின் அடிப்படை கணிதத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நடுநிலைப்பள்ளிகள் வீதம் தமிழகத்தில் 64 பள்ளிகளில் கணித ஆய்வகம் ஏற்படுத்தப்படும்.

பள்ளி ஒன்றுக்கு இரண்டு லட்சம் வீதம் 64 பள்ளிகளுக்கு 1.25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.இதுசார்ந்த, தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் விபரம் முன்பே அனுப்பப்பட்டும், மீண்டும் பள்ளிகளின் பெயர் பட்டியல், மார்ச் ௫ம் தேதிக்குள் அனுப்ப மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. பள்ளிகளில் ஆர்வமுள்ள கணிதபட்டதாரி ஆசிரியர், ஆய்வகம் அமைக்க வகுப்பறை வசதி, உபகரணங்களை பாதுகாப்பாக வைக்கும் வசதி, மாணவர்களின் எண்ணிக்கை ஆய்வு செய்யும் பணி தற்போது துவங்கியுள்ளது. ஆய்வுக்கு பின் பள்ளிகளின் பெயர் பட்டியல் அனுப்பப்படவுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நிடுநலைப்பள்ளிகள் வீதம் தமிழகத்தில் 64 பள்ளிகளில் கணித ஆய்வகம் ஏற்படுத்தப்படும். பள்ளி ஒன்றுக்கு இரண்டு லட்சம் வீதம் 64 பள்ளிகளுக்கு 128 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி