அரசு பொது தேர்வு குறித்து இன்று தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2014

அரசு பொது தேர்வு குறித்து இன்று தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரசு பொது தேர்வு, அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதில், மாணவர்கள் தேர்வு எழுத, எதிர் கொள்ள வேண்டிய முறைகள் குறித்து, இன்று,
அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பயிற்சி வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொது தேர்வில், 8. 50 லட்சம்மாணவர்கள் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பிற்கு மார்ச் 26 ல் துவங்கி, ஏப்.,9 ல் முடிகிறது. பிளஸ் 2 விற்கு மார்ச் 3 ல் துவங்கி, 25 ல் முடிகிறது. இவர்களுக்கான செய்முறை தேர்வு, பிப்.,10 ல் முதல் 25 ல் முடிகிறது.பொது தேர்வில் மாணவர்கள், விடைத்தாள் பேப்பரை மாற்றி, "பிட்' அடிப்பதை தடுக்க, 40 பக்கம் கொண்ட "மெயின் சீட்' மட்டுமே கொடுக்க, கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுபோல், விடைத்தாள் மெயின் சீட்டில் , மாணவரின் போட்டோ, ரகசிய குறியீட்டு எண், பார் கோடு எண் கொடுக்க உள்ளனர்.மாணவர்கள் தேர்வு எழுதும் முறை குறித்து, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், உதவியாளர்களுக்கு, கருத்துரை வழங்கி உள்ளார். இதை, இன்று, அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு, அந்தந்த கல்வி மாவட்டத்தில் கூட்டம் நடத்தி ,எடுத்து கூற உள்ளனர். இதை தொடர்ந்து, தேர்வு குறித்த விளக்கங்களை,மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் விளக்க உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி