பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளருக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் கட்டண விவரம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2014

பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளருக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் கட்டண விவரம்.


பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம், மாதாந்திர கட்டணம், "பிராட்பேண்ட்' சேவை பயன்பாட்டு அளவு குறித்த தகவல் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.இதுகுறித்து,
பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள அறிக்கை: வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையை, முழுமையாக மேற்கொள்ள, பி.எஸ்.என்.எல்., தரை வழி தொலைபேசி வாடிக்கையாளர்களின், மொபைல் போன் எண் மற்றும் இ மெயில் முகவரியை, 53334 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், ஒவ்வொரு முறையும், வாடிக்கையாளர்களின் விவரங்களை அறிய வேண்டிய நிலை தவிர்க்கப்படும். தரை வழி தொலைபேசி எண்கள் பழுதடைந்தால், அவற்றை சரிசெய்ய, லைன்மேனை அனுப்புவது, அவரின் பெயர் ஆகிய தகவல், எஸ்.எம்.எஸ்., மூலம், வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க,மொபைல் போன் எண் மற்றும் இ மெயில் முகவரி உதவியாக இருக்கும்.

மேலும், மாதாந்திரகட்டணத்தையும், கட்டண ரசீதையும், வாடிக்கையாளருக்கு, தபால் மூலம் அனுப்புவதற்குமுன், எஸ்.எம்.எஸ்., மற்றும் இ மெயில் முகவரியிலும் தெரிவிக்க முடியும்."பிராட்பேண்ட்' சேவை பெறும் வாடிக்கையாளருக்கு, "பிராட்பேண்ட்' சேவை உபயோக எவ்வளவு, எந்தத் தேதியில் ரீ சார்ஜ் செய்ய வேண்டும் என்ற, விவரங்களையும், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க முடியும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி